×

ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கல்

மதுரை, டிச.21: மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்க கமிஷனர் விசாகன் உத்தரவு பிறப்பித்தார். மதுரை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து போர்டு ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு இதுவரை தொகுப்பூதிய பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த ஊதியத்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. தொகுப்பு ஊதிய தொகையிலிருந்து கூடுதல் ஊதியம் வழங்கக்கோரி மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு தலைவர் முனியசாமி தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் விசாகனிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் விசாகன், ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு கூடுதலாக ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கூட்டமைப்பு தலைவர் முனியசாமி, செயலாளர் முருகேஸ்வரி, பொருளாளர் கணேசன் ஆகியோர் கமிஷனரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Tags : OHT ,operators ,
× RELATED தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள்,...